பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகள் 10வது தவணைப் பணம் எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் 10வது தவணைப் பணத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு செய்து வருகிறது.
பிஎம் கிசான் திட்டத்தில் மத்திய அரசி சில மாற்றங்களைச் செய்துள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு அடுத்த தவணைப் பணம் கிடைக்க இ-கேஒய்சியை நிறைவு செய்ய வேண்டும். e-KYC வேலையை முடிக்காவிட்டால் பணம் வருவதில் சிக்கல் ஏற்படும். இதுவரை பெறப்பட்ட தகவல்களின்படி, டிசம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு 10வது தவணைப் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://pmkisan.gov.in/aadharekyc.aspx
பிஎம் கிசான் இணையதளத்தில் உள்ள farmers corner என்ற வசதியில் EKYC என்ற ஆப்சன் இருக்கும். அதில் சென்று அப்டேட் செய்ய வேண்டும். இதில் நீங்கள் ஓடிபி சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவீர்கள். மொபைல் நம்பர் அவசியம். இந்த மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதார் கார்டு மிக முக்கியம்.
இது தவிர, உங்கள் தவணையின் நிலையைச் சரிபார்ப்பதும் சுலபமான ஒன்றுதான். இதற்காக நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. பிஎம் கிசான் இணையதளத்தில் நீங்கள் அதைப் பார்க்கலாம். பிஎம் கிசான் வெப்சட்டில் farmers corner டேபில் Beneficiaries list என்ற ஆப்சன் இருக்கும். அதில் சென்று மாநிலம், கிராமம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்டு Get Report கொடுத்தால் உங்களது தவணை நிலையைச் சரிபார்க்கலாம்.
மேலும் தகவலை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் பண்ணுங்க
0 comments:
Post a Comment